சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்

 

சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்

சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2

சுயநலமில்லா சிலுவையின் அன்பு

கல் மனம் கரைத்திடுதே -2

 

முள்முடி சிரசினில் சூடியே

உம்மையே தரித்திரராக்கினீர் -2

எந்தன் சாபம் எல்லாம் நீக்கி

என்னை உயர்த்தினீரே -2

(சிலுவை மட்டும்)

 

பாடுகள் நீர் எனக்காய் சகித்து

உம்  இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2

எந்தன் பாவம் எல்லாம் போக்கி

என்னை இரட்சித்தீரே -2

(சிலுவை மட்டும்)

 

சிலுவையை நீர் எனக்காய் சுமந்து

தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2

என் பலவீனம் எல்லாம் மாற்றி

என்னை வாழ்வித்தீரே -2